இமாச்சல பிரதேச: இமாச்சல பிரதேச பேரிடர் பாதிப்புகளைச் சீரமைக்க தமிழ்நாடு அரசு சார்பாக ரூ.10 கோடி நிதியுதவி வழங்கி உதவியதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு நன்றி தெரிவித்துள்ளார். உங்கள் ஆதரவு, துன்பத்தின்போது ஒற்றுமை, இரக்கத்தின் உணர்வைக் காட்டுகிறது. பருவமழையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணங்களைத் தொடர்ந்து வழங்குவதாக சுக்விந்தர் உறுதி அளித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக கடும் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் நிவாரண பணிகளுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 கோடி ரூபாய் வழங்கினார்.
அத்துடன் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த இயற்கை பேரிடர் காரணமாக அம்மாநில மக்களின் உயிருக்கும். உடைமைகளுக்கும் ஏற்பட்ட கடும் சேதங்கள் தன்னை மிகுந்த வருத்தத்திற்கும் வேதனைக்கும் ஆளாக்கியுள்ளதாகவும், மிகவும் நெருக்கடியான இந்த சூழ்நிலையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை திறமையாக மேற்கொண்டு வருவதற்காக இமாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சரை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டியிருந்தார்.
பாதிக்கப்பட்டுள்ள இமாச்சலப் பிரதேசத்திற்கு உதவுவதற்காக தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டு மக்களும் எப்போதும் தயாராக இருப்பதாகவும், ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தன்னை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் இயற்கை பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக ரூ.10 கோடி நிதியுதவி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.
The post பேரிடர் நிவாரண உதவி: தமிழ்நாடு அரசுக்கு இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு நன்றி! appeared first on Dinakaran.